×

அ. கி. பரந்தாமனார்

அல்லிக்குழி கிருட்டிணசாமி பரந்தாமனார் [1] என்னும் அ. கி. பரந்தாமனார் எழுத்தராக வாழ்க்கையைத் தொடங்கி தமிழ்ப்பேராசிரியராக உயர்ந்தவர் ஆவார். எழுத்தாளர், கவிஞர், சொற்பொழிவாளர் மற்றும் வரலாற்று ஆசிரியராகவும் திகழ்ந்தவர்.

பிறப்பு
அ. கி. பரந்தாமனார் 1902 சூலை 15 ஆம் நாள் சென்னையில் வாழ்ந்த கிருட்டிணசாமி – சிவக்கியானம் இணையரின் நான்காவது மகவாகப் பிறந்தார்.

கல்வி
சென்னை வேப்பேரியில் உள்ள தூய பவுல் (செயின்ட் பால்) உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதிவரை பயின்றார். பணியிலிருந்து விடுப்புபெற்று சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று இடைக்கலை (Intermediate) நிலையையும் அரசியல், வரலாறு ஆகியவற்றைச் சிறப்புப் பாடங்களாகப் பயின்று இளங்கலை (Bachelor of Arts) பட்டத்தையும் 1949 ஆம் ஆண்டில் முதுகலை (Master of Arts) பட்டத்தையும் பெற்றார்.

பணி
அ. கி. பரந்தாமனார் பள்ளிப் படிப்பினை முடித்ததும் ஓராண்டு சென்னை கர்னாடிக் பஞ்சாலையில் எழுத்தராகப் பணியாற்றினார். பின்னர் சென்னை வேப்பேரியில் உள்ள தூய பவுல் உயர்நிலைப் பள்ளியில் ஏறத்தாழ 24 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் 1950 சனவரி 8 ஆம் நாள் மதுரையில் உள்ள தியாகராசர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கு 17ஆண்டுகள் பணியாற்றி 1967 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

பாராட்டுகள்

அ. கி. பரந்தாமனாருக்கு 60 ஆம் அகவை நிறைந்ததும் மதுரை திருவள்ளுவர் கழகம் அவருக்கு மணிவிழா கொண்டாடியது. அப்பொழுது மதுரை எழுத்தாளர் மன்றம் அவருக்குப் பைந்தமிழ்ப் பாவலர் என்னும் பட்டத்தை வழங்கியது..

தஞ்சையில் 1981ஆம் ஆண்டில் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. அவ்விழாவில் அ. கி. பரந்தாமனாருக்கு தமிழக அரசின் திரு. வி. க. விருது வழங்கப்பட்டது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments