
திருமுறிகண்டி கிளைமோர்த்தாக்குதல் 23 மே 2008
கிளிநொச்சி இரணைமடு பாரதிபுரம், மலையாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் 23.05.2008 அன்று ஹைஎஸ் வாகனம் ஒன்றில் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரைப் பார்வையிட்டுவிட்டு தமது வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வாகனத்தில் பல சிறவர்களும் பயணித்துக் கொண்டிருந்தனர். அவ்வேளை பிற்பகல் 2மணியளவில் திருமுறிகண்டியிலிருந்து அக்கராயன் நோக்கிச் செல்லும் வழியில் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் அவர்களின் வாகனம் மீது சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் கிளைமோர்த்தாக்குதலினை மேற்கொண்டனர்.
இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 05பேர் உட்பட 15பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். கொல்லப் பட்டவர்களில் நால்வர் சிறுவர்கள். படுகாயமடைந்த மூன்று பேர் கிளிநொச்சி மாவட்ட வைத்திசயாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மேலும் ஒ சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான குடும்பநிலமையைப் பார்த்தால் மிகவும் பரிதாப நிலைமையை உணரமுடியும்.

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)
![]()