
08.12.1999 அன்று ஆழ்கடலில் வீரகாவியமான கடற்கரும்புலிகளின் வீரவணக்க நாள்
தமிழீழ தாயக விடுதலைக்காகவும், தமிழீழ மக்களின் விடிவிற்காகவும் 08.12.1999 அன்று ஆழ்கடலால் கடற்படையின் தொடரணி சென்று கொண்டிருக்கும் போது அதற்க்கு பாதுகாப்பாகச் சென்ற டோறா ஒன்று இவர்களை நோக்கி தாக்குதல் தொடுத்து நெருங்கி வரும் போது இவர்கள் அவ் டோறாமீது எதிர் தாக்குதல் நடாத்தி மூழ்கடித்து வீரச்சாவடைந்தனர்.
இவ் வெற்றிகரத் தாக்குதலில். கடற்கரும்புலி லெப் கேணல் சிவரூபன், மேஜர் இசைக்கோன், மேஜர் யாழ்வேந்தன், கப்டன் கானகன் ஆகியோர் கடலண்ணை மீது காவியமானார்கள்.
கடற்கரும்புலி
மேஐர் ரங்கன்/யாழ்வேந்தன்
கதிரவேல் ஜெயராம்
காரைநகர்,யாழ்ப்பாணம்
கடற்கரும்புலி
லெப்கேணல் சிவரூபன்
சிவநேசன் சிவபாக்கியநாதன்
மிருசுவில் யாழ்ப்பாணம்
கடற்கரும்புலி
கப்டன் கானவன்
சிவஞானம் சிவகுமார்
முள்ளிவாய்க்கால் மேற்கு, முல்லைத்தீவு
கடற்கரும்புலி
மேஐர் இசைக்கோன்
சிவசாமி சுகந்தன்
இன்பருட்டி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற விநியோகத்திற்க்கு ஏற்பட்ட தடையை நீக்கி விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்க்கு நகர்த்திய பெருமை இவர்களையே சாரும் எனக் கூறுவதில் மிகையாகாது.