வரலாற்றில் இன்று: 1983-07-24
கறுப்பு யூலை
ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்களது ஆட்சிக் காலத்தில், தமிழ் மக்களது வீடுகள், கடைகள், உடமைகள் என்பன பட்டியலிடப்பட்டு சிங்களக்காடையர்களால் எரியூட்டி அழிக்கப்பட்டன. 1983 யூலை 24ஆம் திகதிதொடக்கம் 29ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட இவ்வன்முறைகளால் 2000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 5000 வரையான தமிழர்களது கடைகளும் 1800 வரையான வீடுகளும் அழிக்கப்பட்டன, சிறைகளில் இருந்த 53 தமிழ்க் கைதிகள் வெட்டிக் கொல்லப்பட்டனர், 600வரையான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டனர், இவை தொடர்பான சரியான புள்ளிவிபரங்களை சிங்கள அரசுமூடிமறைத்து விட்டது.