×

2021-08-28

வரலாற்றில் இன்று: 2021-08-28

Remembering Sengkodi today

*”செங்கொடி..!!”* கொடிகாக்கத் – தன்னைக் கொளுத்திக் கொண்ட உயிருண்டு உயிர்காக்கத் தன்னைக் – கொளுத்திக் கொண்ட கொடியுண்டா? உண்டு: அதன்பேர் செங்கொடி:
இனிமேல் – அதுதான் என் கொடி!
தொன்மைத் தமிழரெலாம் – ஒரு தொப்புள் எழுந்த கொடி: இவள் தொப்புள் எழுந்த கொடிகளைக் காக்க -வெப்புள் விழுந்த கொடி!
இதுதான் – எனது – வணக்கத்திற்குரிய கொடி! இதை வணங்காது வேறெதற்கு முடி?
மூவுயிர் விடு! ஈடாக என் – பூ வுயிர் எடு! என்று எமனிடம் தந்தாள் தன்னை;
செங்கொடி கன்னியாயினும் – மூன்று சேய்களைக் காத்த அன்னை! ஆம்; அந்தக் – கன்னி தீயானாள்; தீயாகி – கன்னித் தாயானாள்!
பெருவாரியான நாடுகள் பெரும்பிழை புரிந்தோரையும் – சிறையில் வைக்க முயலுமேயன்றி – சிதையில் வைக்க முயாலாது;
ஏன் எனில் –
சிதையில் வைத்தது தவறென்றால் சீவனை வழங்க இயலாது!
மரண தண்டனைக்குதான் மரண தண்டனை தர வேண்டும்;
மானுடற்கு மரணம் – கயிறு வழி யல்ல; காலன் வழிதான் வர வேண்டும்!
விழிநிறையக் கனாக்களுமாய்; விடை தெரியா வினாக்களுமாய்;
இருபது ஆண்டுகள் இறந்து போனபின்…
இம் மூவர்க்கு இன்னமும் மீதமாய் –
இருக்கும் வாழ்வையும் – கயிறு சுருக்கும் என்றால் ….
அது – அரக்கம் இருக்க வேண்டாமா – இரக்கம்?
‘கண்ணுக்குக் கண்! எனும் கருத்தை ஏற்காதவர் காந்தி;
தபால் தலையில் மட்டுமல்ல நாம் நடக்க வேண்டாமா – நம் எண்ணத்திலும் தேசப்பிதாவை ஏந்தி?
செங்கொடியே என் செல்ல மகளே! சேவிக்கத் தகுந்ததுன் சேவடி துகளே!
ஒன்றுரைப்பேன்; உன் தியாகத்திற்கில்லை
ஒப்பு;
என்றாலும் – அதை ஏற்பதற்கில்லை; அது தப்பு!
 – *கவிஞர் வாலி.*
Download Best WordPress Themes Free Download
Premium WordPress Themes Download
Free Download WordPress Themes
Download WordPress Themes
free download udemy course
download coolpad firmware
Download Premium WordPress Themes Free
free online course