×

கேணல். தமிழேந்தி (ரஞ்சித்தப்பா)

தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைச் செயலர், தமிழீழ நிதிப் பொறுப்பாளர், கேணல் தமிழேந்தி (ரஞ்சித்தப்பா) கேணல் தமிழேந்தி (சபாரத்தினம் செல்லத்துரை), 15.02.1950 யாழ். மாவட்டத்தில் பிறந்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றியவர். தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையைத் திறம்பட செயலாற்றி தேசியத் தலைவரினாலும், போராளிகளாலும் நன் மதிப்புபெற்றிருந்தவர். 10.03.2009 அன்று இலங்கை ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் இருந்து விடுதலைக்காக உழைத்து அனைவராலும் “தமிழேந்தி அப்பா” என அழைக்கப்படும் ஒருவர். தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதிப்பிரிவுப் பொறுப்பாளராக செயற்பட்டு விடுதலைப்போராட்டத்திற்காக தாயகத்திலும், புலம்பெயர்நாடுகளிலும் நிதியினைப் பெற்றுக்கொள்ளும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டார். தாயகத்தில் பல்வேறு துறைகளை உருவாக்கி ஒருநாட்டின் அராசங்கத்தின் வருமானங்கள் எவ்வழிகளில் பெற்றுக்கொள்ளலாமோ, அவ்வாறு பலவழிகளில் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டார். இதற்காக பல பிரிவுகளை உருவாக்கி, பண்ணைகளை உருவாக்கி, தொழிற்சாலைகளை உருவாக்கி, மற்றும் விவசாய செய்கையினை மேற்கொண்டு விடுதலைப்போராட்டத்திற்கான வருமானங்களை ஈட்டிக்கொண்டிருந்தார்.  மற்றும் விடுதலைப்புலிகளின் கட்டமைப்பின் தளஅமைப்பு வேலைகள் உள்ளிட்ட கட்டுமான வேலைகள் அனைத்தினையும் ஒழுங்குபடுத்தி மேற்கொண்டார். சமாதான காலப்பகுதியில் தமிழ் மொழியில் பற்றுக்கொண்டு, அனைத்து நிர்வாக கட்டமைப்புக்களிலும் தமிழ்ப் பெயர்சூட்டி தமிழினை வளர்க்க பெரும்பாடுபட்டார்.

பல போராளிகளுக்குத் தமிழ்மொழி ஊடாகப் பல திட்டங்களையும், தமிழின் வரலாற்றினையும் கற்றுக்கொள்ள பல முனைப்புக்களுடன் செயற்பட்டார். தாயகத்தில் போர் உக்கிரம் பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறைத் செயலர் மாற்றம் பெற்று விடுதலைப்போராட்டத்திற்கான அடுத்தகட்டப் பணியினை மேற்கொண்டார். இந்த காலப்பகுதியில் களத்தில் நிற்கும் போராளிகளையும், தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டமைப்பினையும் சீர்செய்து போராளிகளின் செயற்பாட்டினைக் கண்டு படைத்துறை ரீதியிலான பல வளர்ச்சிகளுக்கு தமிழீழ தேசியத்தலைவர் அருகில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருந்தார். இந் நிலையில் இலங்கைப் படையினரின் போர் உக்கிரம் பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் 10.03.2009 அன்று புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் இலங்கைப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீர வரலாறானார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து, அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையைத் திறம்பட செயலாற்றி, தேசியத் தலைவர் அவர்களினதும், போராளிகளினதும் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments