
முள்ளிவாய்க்கால் – நினைவின் நெருப்பு
முன்றிலும் மழை பெய்யாத
அந்த மே மாதம்
வெடி குண்டுகள்
மழையாகப் பொழிந்தன
கடலும் நிலமும் கூட்டு சேர
இரவு வாய் விட்டு கதறி அழுதது
பெயர் தெரியாத
குழந்தைகளின் சுவாசமும்
குண்டு வீச்சில் பரவிய
புகைக் காற்றில் மறைந்தது…தமிழர்களின் பூர்வீக நிலத்தைச்
சிங்கள சர்வாதிகாரம்
சிலந்தி வலையில் சிக்க வைத்து
உரிமை கொண்டாடிக்
கூறு போட்டது!
தாய்த் தமிழ் மொழியின்
மண் உரிமை போராட்டத்தில்
பசுமை பள்ளத்தாக்குகளில்
நதியாக ஓடியது
தமிழர்களின் ரத்தம்..பௌத்தப் பதாகையின் கையில்
அமைதியின் முகமூடியோடு
வந்தது அநியாயம்.
நீதியின் கண்களாகத்
திகழ வேண்டிய நாடுகள்
கண்கள் மூடி
மௌன உரையாடலில்
அராஜக அரசுடன் விருந்துண்டன..ஓர் இரவில் எத்தனை கனவுகள் நசிந்தன!
எத்தனை எதிர்கால இலக்குகள்
நசுங்கின!
முள்ளிவாய்க்கால் என்னும்
மண் வாசனை
இருண்ட நிலத்தில் இன்னும்
ரத்தத்தின் வாடை வீசுகிறது..இன்று – மே 18,
குண்டு வீச்சுக்குப் பலியான
ஒவ்வொரு உயிரின் பெயரையும்
மனக் குமுறலோடு
இதயத்தில் ஏந்துகிறோம்.
உலகம் மறந்தாலும்,
முள்ளிவாய்க்கால் துயர அழுகுரல் எங்கள் மனங்களில் ஒலிக்கும்..நீதி தூக்கில் தொங்கி
உயிரிழந்த போதும்
நினைவுகள் உயிரோடு
இருக்கின்றன.
அப்பாவி ஈழத்தமிழர்களின்
உயிர்கள்
சாதாரணமானவை அல்ல
அவர்கள் எங்கள்
சுதந்திரத்தின் விதைகள்.!