×

“இந்தி ஆளுமோ -இனி தமிழ் தாழுமோ”

அறந்தாங்கி அருகே உள்ள சிம்மச் சுனையக்காட்டில் 15-1-1947 இல் முத்து பிறந்தார். புதுக்கோட்டை கீரனூரில் உணவு விடுதி ஒன்றில் பணியாற்றி வந்ததால் கீரனூர் முத்து ஆனார். 27-1-1965 இல் உயிர் துறந்தபோது இருபத்திரண்டு வயது அவருக்கு.

“இந்தி ஆளுமோ -இனி தமிழ் தாழுமோ” -என்று நெஞ்சம் பதைத்து நஞ்சுண்டு மாய்ந்தார் நம் முத்து. உயிர் நீங்கிய அவர் உடலில் இரு கடிதங்கள் பாதுகாப்பாய் இருந்தன. இந்தித் திணிப்பைக் கண்டித்து அன்றைய முதல்வருக்கு எழுதியது ஒன்று .

தமிழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பாடுபடுங்கள் என்று அறிஞர் அண்ணாவிற்கு எழுதியது மற்றொன்று.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments