×

நந்திக் கடலில் சிந்திய குருதியதை கையில் ஏந்தி நடக்கின்றோம்!

நந்திக் கடலில் சிந்திய குருதியதை கையில் ஏந்தி நடக்கின்றோம்!

நந்திக் கடலில் சிந்திய குருதியதை கையில் ஏந்தி நடக்கின்றோம்!
முள்ளிவாய்க்காலின்
கடலோரம் எங்கள் உடல்கள் சிதையும் வரை விடுதலைக் கனவை தாங்கி நின்றோம்!
அன்று காலம் எமக்காய்
கண்திறக்கவில்லை!
ஒரு பெரும் தேசம் பல்
தேசங்களின் சன்னங்களால் சல்லடையான

சாட்சிகளாய் கடந்தோம் வட்டுவாவல்
பாலம் தாண்டி!
சிந்திய செங்குருதியின்
உயிர்ப்பாய் உலகத் திசை எங்கும் உயிர் கொண்டு நடக்கின்றோம்!
தலைவன் சிந்தனையில்
காலம் எமக்காக திசை மாறும்!
நந்திக் கடலும் வட்டுவாவல் பாலமும் நீதியின் முன் நிமிர்வு கொள்ளும்! அதற்காகவே விடுதலைத் தாகம் சுமந்து நடக்கின்றோம்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments