×

கஞ்சி ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒன்று.

கஞ்சி ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒன்று. உண்ண உணவின்றி உறங்க குடில் இன்றி இரத்த வாசத்தை சுவாசித்துக் கொண்டு திரிந்த மக்களுக்கு உண்பதற்காக இருந்த ஒரே ஒரு உணவு இக்கஞ்சி தான். இதை மறப்பதென்பது இயலாத காரியமாகி விட்டது.

முள்ளிவாய்க்கால் தமிழினத்தினால் மறக்கவோ மறுக்கவோ முடியாத இனவழிப்பின் சாட்சியம். அங்குதான் எம்மினத்தின் மீது சிங்கள பௌத்த மதவெறி பிடித்த பேரினவாதிகளால் எம் இனம் அழித்தொழிக்கப்பட்டது. உரிமைகள் வேண்டி போராடிய எமது உரிமைப் போராட்டம் வல்லரசுகளால் முடக்கப்பட்டது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments