×

கந்தளாய் படுகொலை 09.11.1985

கந்தளாய் பிள்ளையார் கோயிலடியில் வசிதத் திரு. மயில்வாகனம் என்பவரின் வீட்டிற்கு 1985.11.09 அன்றிரவு ஆயுதம் தரித்த இராணுவ வீரர்கள் சென்று வீட்டிலிருந்த ஆறு பேரையும் ஆயுத முனையில் கடத்திச் சென்றார்கள். பின்னர் இவர்களின் உயிரற்ற உடல்கள் அல்லை வீதியில் நான்காம் கட்டைப் பகுதியில் மிகவும் மோசமான நிலையிற் காணப்பட்டன.

கடத்திச் செல்லப்பட்ட ஆறு பேரில் மயில்வாகனத்தின் இரண்டு மகள்களும் அடங்குவர். இவர்கள் இரண்டு பேரின் பிரேத பரிசோதனையின் படி இவர்கள் மோசமான முறையில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்தது.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments