×

மாணவப் போராளிக்கு வீரவணக்கங்கள் 28. 03.1991

மாணவப் போராளிக்கு வீரவணக்கங்கள் 28 – 3 – 1991. அன்று கீரிமலையில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூடுபட்டு விடுதலைப் புலிகள் மாணவர் இயக்க அங்கத்தவரான ஜெகன் வீரமரணமடைந்துள்ளார். விடுதலைப் புலிகளின் மாணவர் இயக்கத்தின் பல்வேறு வேலைத்திட்டங்களிலும் பங்குகொண்ட ஜெகன் ஒரு தமிழீழ மாணவனுக்கே உரித்தான தேசக் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தான். 28 – 3 – 1991 அன்று கீரிமலையை நோக்கி இராணுவத்தினர் முன்னேற எடுத்த நடவடிக்கையை முறியடிக்க நடந்த சண்டையில் காயமடைந்த புலி வீரர்களை மீட்டெடுத்து – முதலுதவிச் சிகிச்சை அளிக்கும் பணியில் மாணவர் இயக்க அங்கத்தவர்கள் சிலருடன் ஜெகனும் ஈடுபட்டிருந்தான். ஒரு புலி வீரனுக்கே உரித்தான துணிச்சலுடனும், எது நடந்தாலும் நடக்கட்டும் என்ற மனோதிடத்துடனும் களம் புகுந்து காயமடைந்த போராளிகளுக்கு முதலுதவிச் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது எதிரியின் துப்பாக்கிக் குண்டுபட்டு ஜெகனும் களத்தில் மடிந்தான். தமிழீழ மாணவ சமூகத்துக்கு ஒரு முன்னோடியாக இருந்து வீரமரணமடைந்த இந்த மாணவப் போராளிக்கு எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மாணவப் போராளிக்கு வீரவணக்கங்கள் 28. 03.1991

விடுதலைப்புலிகள் சித்திரை 1991 குரல் 22

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments