×

வன்னி விளாங்குளம் துயிலுமில்லம்!

வன்னி விளாங்குளம் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வு!

தமிழீழ விடியலுக்காய் போராடி வீரகாவியமான மாவீரர்களை நினைவுகூர்ந்து தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் கார்த்திகை (நவம்பர் ) 25 முதல் 27 வரை மாவீரர் வாரமாக அனுசரிக்கப்பட்டு கார்த்திகை (நவம்பர்) 27 அன்று மாவீரர் நாள் நினைவு கூரப்படுகின்றது.

தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரைத் தியாகம் செய்த வீரர்களை நினைவு ‘கூரும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு’ வன்னி விளாங்குளம் மாவீரர் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது. இதன் போது மாலை 6.5 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவீர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மலர்தூவி ஈகைச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக உயிர் நீத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments