×

1790 இல் கட்டபொம்பன்  பாளையக்காரர்  ஆனார். 1792 ஆம் ஆண்டு

1790 இல் கட்டபொம்பன்  பாளையக்காரர்  ஆனார். 1792 ஆம் ஆண்டு கர்நாடக ஒப்பந்தத்தின் மூலம் பாளையக்காரர்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை ஆர்காட்டு நவாப் ஆங்கிலேயருக்குக் கையளித்தார்.

திருநெல்வேலி மாவாட்ட கலெட்டர் காலின் ஜாக்சன் கப்பம் கேட்டும், பின்னர் கப்பம் கட்டாமைக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறும் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கடிதம் அனுப்பினார். இதை முதலில் புறக்கணித்த கட்டபொம்மன் ,பின்னர் ஜாக்சனை சந்திக்க 23 நாட்களில் 400 மைல்கள் சுற்றி அலைந்த பிறகு ஜாக்சனை இராமநாத புரம் அரண்மனையில் செப்டம்பர் 20 ஆம் நாள் சந்தித்தார்.

வீரபாண்டிய கட்டபொம்மனை மரியாதைக் குறைவாக நடத்தியதுடன் அவரைக் கைது செய்யவும் ஜாக்சன் உத்தரவிட்டார். கட்டபொம்மன் தன் உடன் வந்தவர்களுடன் தாக்குதல் நடந்தித் தப்பிச் செல்லும்போது, வாயிலில் ஏற்பட்ட மோதலில் லெப்டினன்ட் கிளார்க் கொல்லப்பட்டார்.

1799 இல் கட்டபொம்மன் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் பாளையக்காரர்களை அணிதிரட்டினர் . இந்த அமைப்பு ‘திருநெல்வேலி கூட்டமைப்பு ‘ ஆகும் 1799 செப்டம்பர் 5 ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை கைப்பற்ற மேஜர் பானர்மேன் தலைமையில் ஆங்கிலயப்படை பீரங்கித்தாக்குதலைத் தொடங்கியது , மண் கோட்டை ஒரு பகல் முழுவதும் தாக்குபிடித்தது. பிளவுற்ற தெற்கு வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்ற ஆங்கிலேயப்படை தளபதி காலின்சு வெள்ளையத் தேவனால் கொல்லப்பட்டார்.

கோட்டையை வெளியேறி திருக்காளம்பூர் காடுகளில் மறைந்து கொண்ட கட்டபொம்மனை புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமான் ஆங்கிலேயருக்குப் பிடித்துக் கொடுத்தார் . அக்டோபர் 16 ஆம் நாள் ,மேஜர் பானர்மேன் கட்டபொம்மன் மீது குற்றம் சுமத்தி விசாரணை நடத்தித் தூக்குத்தண்டனை விதித்தார் . அக்டோபர் 16 -அன்று கயத்தாறு என்னுமிடத்தில் உறுதியையும் வீரத்தையும் வெளிப்படுத்திய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார் .

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments