×

நாம் கீழடி, கொற்கையில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழி (தமிழ் பிராமி) எழுத்துக்கள்

நாம் கீழடி, கொற்கையில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழி (தமிழ் பிராமி) எழுத்துக்கள் தான் மிகவும் பழைமையான எழுத்துக்கள் என நினைத்துக்கொண்டிருக்கின்றோம். அதற்கு முன்னரே ஈழத்தில் 1972 ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் சிரான் தெரணியகல மேற்கொண்ட ஆய்வில் கி.மு 7-5 ஆம் நூற்றாண்டைச் சேந்த பானை ஓடு ஒன்றில் தமிழ் பிராமி எழுத்துக்களைக் கண்டறிந்தார். அந்த பானை ஓட்டில் #தயா_குட என்ற வசனம் காணப்பட்டது.

இதன் பொருள் தயாவின் குடம் என்பதாகும். நாம் இந்த பானையோட்டை சாதாரணமாக நினைக்கக்கூடாது. ஈழத்தமிழர் வரலாற்றில் இது ஒரு முக்கியமான ஆவணமாகும். பாளி இலக்கியங்களில் விஜயனின் வருகை கி.மு 6 ஆம் நூற்றாண்டு இந்த பானையோட்டின் காலம் கி.மு 7-5 இதன் மூலம் விஜயன் இலங்கைக்கு வருகை தரும்போது இங்கு தமிழ் மொழியில் பரீட்சித்து பெற்ற ஒரு குழுவினர் இங்கு வாழ்ந்துள்ளமையினை சிங்கள தொல்லியல் ஆய்வாளரான சிரான் தெரணியகலவே ஒப்புக்கொண்டுள்ளார்.

நன்றி –  ஈழத்து வரலாறு
 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments