×

உலகிலேயே தாய்மொழி காக்கத் தீக்குளித்து உயிர் ஈகம் செய்த முதல் ஈகியான தமிழர்.

25.01.1964 அன்று அதிகாலை  திருச்சி தொடர் வண்டி நிலையத்தில் தன்னுடலில் தீ வைத்துக்கொண்டார்

உலகிலேயே தாய்மொழி காக்கத் தீக்குளித்து உயிர் ஈகம் செய்த முதல் ஈகியான தமிழர். அரியலூரை அடுத்துள்ள கீழ்ப்பழுவூரில் 30.07.1937 இல் ஆறுமுகம் -தங்கத்தம்மாள் இணையரின் மகனாகப் பிறந்த சின்னசாமி, வேளாண்மையில் ஈடுபட்டு, தமிழுணர்வும், தன்மான உணர்வும் மிகுந்தவராக வளர்ந்தவர். இவரது மனைவி கமலா, மகள் பெயர் திராவிடச்செல்வி .

‘இந்த ஆட்சி மொழிச் சட்டம் ‘ அறிவிப்பை அடுத்து சென்னை சென்று தியாகராய நகர் தொடர்வண்டி நிலையத்தில் அன்றைய முதலமைச்சரை சந்தித்துத் தமிழைக் காப்பாற்ற வேண்டி காலில் விழுந்து வேண்டினார் .அலட்சியப்படுத்தப்பட்ட உணர்வோடு திருச்சி திரும்பியவர் . 25.01.1964 அன்று அதிகாலை  திருச்சி தொடர் வண்டி நிலையத்தில் தன்னுடலில் தீ வைத்துக்கொண்டார். தமிழ் வாழ்க ! இந்த ஒழிக! என முழக்கமிட்டுக்கொண்டே கரிந்து சரிந்தார் .மறைந்தார்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments