×

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம்

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள பகுதியில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துமுகமாக சுடரேற்ற முற்பட்ட போது இராணுவத்தினர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மாவீரர் நாளை முன்னிட்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துமுகமாக வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்,கே.சிவாஜிலிங்கம் தலைமையில் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள பகுதியில் சுடரேற்ற முற்பட்ட போது இராணுவ முகாமினுள் இருந்து வந்த இராணுவத்தினர் இப்பகுதியில் சுடரேற்ற வேண்டாம் எனக் கூறி அதனைத் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் இராணுவ முகாமுக்கு அருகில் சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த காணியில் தற்போது படையினர் பாரிய இராணுவ முகாமை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments