×

அதோ அந்த பறவை போல – லெப்.சீலன்

1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 15ஆம் திகதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து போயிருக்கிறது. அந்த அமைதியைக் குலைத்துக்கொண்டு, சிறீலங்காவின் இராணுவக் கூலிப்படைகள், அந்தச் சிறிய கிராமத்தை சுற்றி வளைக்கின்றன. கச்சாய் வீதியுடன் இணையும் அல்லாரை மீசாலை வீதியை, அரசபடைகளின் வாகனங்கள் ஆக்கிரமிக்கின்றன.

ஒரு மினிபஸ்இ இரண்டு ஜீப், ஒரு இராணுவ ட்ரக் வண்டி.நூறு பேருக்கு மேல் சிவிலுடையணிந்த சிங்கள இராணுவ அதிரடிப்படையினர்;; அந்தக் கிராமம் சிலிர்த்துக்கொள்கிறது. கல்லும் மணலும் கலந்த குச்சு ஒழுங்கைகளுக்கூடாக, நான்கு இளைஞர்கள் இயந்திரத் துப்பாக்கிகளுடன் சைக்கிளில் விரைந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு துரோகி காட்டிக்கொடுத்ததால் சிங்கள இராணுவம் தங்களது மறைவிடத்தைச் சுற்றிவளைப்பதை உணர்ந்து, அந்தக் கிராமத்தை விட்டு வெளியேற விரையும் அந்த நான்கு இளைஞர்களும் அதோ அந்த அல்லாரை மீசாலைத் தார் வீதியைக் கடந்து கொண்டிருக்கிறார்கள்.

வீதியின் ஒருபுறம் சுடலையருகேயும் மறுபுறம் நெசவு நிலையத்திற்கருகேயும் நின்றுகொண்டிருந்த இராணுவ வண்டிகள், இளைஞர்கள் கடந்த ஸ்தலத்தை நோக்கிச் சடுதியாக விரைகின்றன. அந்த ஸ்தலத்தில் இராணுவ வண்டிகள் குலுங்கிக் கொண்டு நிற்கின்றன. இராணுவத்தின் குண்டு துளைக்கும் எல்லைக்குள் அந்த இளைஞர்கள் விரைந்துகொண்டிருக்கிறார்கள். மினி பஸ்ஸிலிருந்த இராணுவத்தினர் இறங்கியோடிப் பனங்கூடலினுள்ளே பாதுகாப்பான இடங்களில், தங்களை நிலைப்படுத்திக்கொள்கின்றனர். மொத்த இராணுவத்தினரில் முப்பதுக்கு மேற்பட்டோர் பனை வடலிக்குள் குழுமுகின்றனர். தார் வீதியைக் கடந்த இளைஞர்கள் துரதிஸ்டவசமாக இப்போது நின்றுகொண்டிருப்பது வெறும் பொட்டல் வெளியில், சுற்றிலும் சூழ்ந்துகொண்டுவிட்ட அரச தலைவர்களை உறுத்துப் பார்க்கிறான் அந்த இளைஞர்களின் தலைவன். அவன்தான்- சீலன்! அரச படைகளின் கண்ணுக்குள் விரலைவிட்டு ஆட்டிய வீரமறவன். ஆசிர்- சீலன்- இதயச்சந்திரன்- ஆகிய பெயர்களில், அரச படைகள் வெறிகொண்டு தேடும், லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவுத் தலைவன். குஐசுநு! ‘சுடுங்கள்.’ கட்டளை பிறப்பித்த சீலனின் இயந்திரத் துப்பாக்கி சடசடக்கின்றது. மற்ற இளைஞர்களும் விரைந்து துப்பாக்கிகளை இயக்குகின்றனர். வெட்டவெளியில் அந்த வீரமகன் சீலன் அவனுக்கருகில் ஆனந்த் என்னும் அருள்நாதன். உடலும் உள்ளமும் வைரம் பாய்ந்தவன். அவனோடு இன்னுமொரு வீரன. ஆபத்தின் எல்லைக்கப்பால் அடுத்த வீரன். உறுதி, நிதானம், வேகம்இ லாவகம். களத்திலே புலிகள்.

இளைஞர்களின் எதிர்த்தாக்குதல் சிங்களக் கூலிப்படைகளைத் திணறச்செய்கிறது. ஆனாலும் பாதுகாப்பான பனை வடலிக்குள் பதுங்கிக்கொண்டு அந்தக் கூலிகளும் தொடர்ச்சியாகத் தாக்குகின்றனர்.

வெட்டவெளியில் தொடர்ந்து முன்னேறவோஇ பின்வாங்கவோ, முடியாத இக்கட்டான நிலையில் அவர்கள் சிக்கிக்கொண்டுவிட்டனர். ஆனாலும், ஆயுதங்களோடு அரசபடைகளின் கையிற் சரணடையும் கோழைகளல்ல இவர்கள்! பிரபாகரனின் கைகளிலே வளர்ந்தவர்கள்;;; எதிரிகளின் கைகளிற் பிடிபடுவதை விட மானத்தோடு சாவது மேல் என்ற வீரமரவிற் பயிற்றப்பட்டவர்கள்.

இறுதி மூச்சுவரை அந்தப் புலிகள் போராடத் திடங்கொண்டனர். சுற்றிலும் குவிந்து நிற்கும் கூலிப்பட்டாளம்! வெளியைத் துளைக்கும் சன்னங்கள். மண்தரையில் புழுதி கிளப்பும் குண்டுகள், சீலனின் இயந்திரத் துப்பாக்கி தொடர்ந்து சடசடக்கின்றது.! ஆனாற் கூலிப்படையின் துப்பாக்கிச்சன்னம், ஏற்கனவே சீலன் பெற்றிருந்த சீலனின் வீரத் தழும்புகளைக் கிழித்துக்கொண்டு மார்பில் பாய்கின்றது. இரத்தம் பீறிடச் சீலன் தள்ளாடுகின்றான்.  இரண்டு முறை முன்னரே களத்தில் குருதி சிந்திய அந்த வீரன் தன்னுயிர் போகவில்லை என்பதை உணர்கிறான்.

உயிரோடு அகப்பட்டாற் கடித்துக்குதறக் காத்திருக்கும் வேட்டை நாய்கள் சுற்றிலும்! ‘என்னைச் சுட்டுக் கொன்றுவிட்டு நீங்கள் பின்வாங்குங்கள்’ என்று சீலன் கட்டளையிடுகின்றான. படைத்தலைவனின் கட்டளை. பணிக்கப்பட்ட இளம் வீரனோ திகைத்துப்போய் நிற்கிறான். பனை வடலிக்குள் வசதியாய் பதுங்கி நிற்கும் இராணுவ வேட்டை நாய்களின் தொடர்ந்த வேட்டுமழை. சீலனின் கட்டளையை நிறைவேற்றுவதா? பாசம்மிக்க தோழனின்இ வீரம்மிக்க போராளியின் மரணம் தன்னால் நிகழ்வதா? அல்லது அவனை உயிருடன் எதிரியின் கையிற் பிடிபட விட்டுவிட்டுத் தான்; பின்வாங்குவதா?
வினாடி நேரத்தில் விடை காணவேண்டிய நிர்ப்பந்தம் அந்த வீரனுக்கு  ‘என்னைச் சுடடா சுடு’ – சீலனின் கண்டிப்புடன் கூடிய கட்டளை மீண்டும் பிறக்கிறது. நெஞ்சில் வழியும் இரத்தம், முகத்தில் துளிக்கும் வியர்வை. சீலன் தள்ளாடியவாறு கண்டிப்புடன் மீண்டும் கட்டளையிடுகிறான்.

இட்சியத் தணலிலே புடம்போட்ட அந்த வீரனின் நெஞ்சில் உறுதி பிறக்கின்றது. கண நேரத்திற்குள் சீலனின் தலையில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்கின்றன. புரட்சி வீரன் சீலனின் உடலை மீசாலை மண் அணைத்துப் பெருமை தேடிக்கொள்கின்றது.

அதற்குள,; குறிபார்த்துச்சுடுவதற்கு வாகான – வாட்டசாட்டமான தோற்றம் கொண்ட ஆனந்த் குண்டுபட்டுச் சாய்கிறான். ஆனந்த் உயர்ந்தவன் – தோற்றத்தில், தன்மானத்தில், வீரத்தில்.
‘என்னையும் சுட்டுவிடு’ – ஆனந்தின் வேண்டுகோள்.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தூய்மைக்கு முத்திரை பதிக்கும் இரத்தச் சாட்சிகள். பிரபாகரனின் பயிற்சிக் களத்திலே வளர்ந்த வேங்கைகள். ஆனந்தின் தன்மானம் காக்கிறான் அந்த இளம் வீரன். மீசாலை மண்ணில் இரண்டு மாணிக்கங்கள் தரையிற் சரிந்ததும் இராணுவக் கூலிப்படை கும்மாளமிட்டது. வீழ்ந்துவிட்ட வீரர்களின் துப்பாக்கிகளையும் ஏந்திக்கொண்டுஇ மற்றைய வீரர்கள் இருவரும் தப்பிச்சென்று விட்டனர்.
இறந்துகிடப்பவர்கள் யார்?

இராணுவ மிருகங்கள் நெற்றியைச் சுழிக்கின்றன. தங்களின் கைவசமுள்ள ‘தேடப்படுபவர்களின்’ புகைப்படக் குவியலில் இவர்களின் புகைப்படங்கள் இல்லையே! அந்தக் கூலிப்படையின் மேஜர் ஒருவன் சீலனின்; சாரத்தை உயர்த்திஇ வலது காலைப் பார்க்கிறான். வலது காலின் முழங்கால் மூட்டுக்கு மேற்பகுதியில் ஐந்து துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த தழும்புகள். அந்த மேஜர் உரத்துக் கத்துகிறான். ‘இவன்தான் சீலன்!’ சீலன் இருபத்து மூன்று வயதுகூட நிரம்பாத இளைஞன், அழகான முகம்இ அழகாய்ச்;;;; சிரிப்பான,; அவனது பேச்சிலே மழலை சொட்டும், பழகுவதிலே அவன் குழந்தை, யாரையும் கவர்ந்திழுக்கும் வசீகரம் அவனுடையது.

ஓரத்தில் உதட்டைக் கடித்துக் கொண்டு, கண்களைச் சுருக்கிக் கொண்டு அவன் சிரிக்கும் அழகு அவனுக்கேயுரியது. இவனோடு பழகக் கிடைத்தவர்கள் அதிர்ஸ்டசாலிகள். தான் மட்டுமல்ல, தன்னோடு இருப்பவர்களையும் எப்போதும் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பான். கூச்ச சுபாவம் உள்ளவன். ஆனால் பழக ஆரம்பித்தால் மிகவும் இனிமையாகப் பழகுவான். அன்பு செலுத்தத் தெரிந்த இவன் அன்பைப் பிரியமாக ஏற்றுக்கொள்வான்.  பிரியமானவர்கள் விளையாட்டுக்காகக் கோபித்தாற் கூட அதனை அவனால் தாங்கிக் கொள்ள முடியாது. போலித்தனம் இவனுக்குத் தெரியாது. ஆர்ப்பாட்டமே இல்லாதவன். ஆயுதப்படைகளுக்கு எதிரான அதிரடித் தாக்குதல் என்றால் யுத்தசன்னத்தனமாக களத்திற் குதிக்கம் இவன, சாதாரணப் பொழுதுகளில் தென்றலாகத் தெரிவான். அவன் ஆத்மாவை விற்கத் தெரியாத புரட்சிக்காரன்.

பிழைகளைச் சுட்டிக் காட்டுவதில் நக்கீரன். சோசலிசத் தமிழீழத்தை நோக்கிய அவனது சிந்தனைகளும் செயற்பாடுகளும் திட்டவட்டமானவை. தலைவர் பிரபாகரனின் தலைமையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின விடுதலைப் போராட்டத்திலேயே தமிழிழம் வெல்லப்படும் என்பதில், சீலன் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தான். பிரபாகரனின் நேர்மையிலும் தூய்மையிலும் திறமையிலும் அவன் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தான். தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பணியில், ஒரு தலைமறைவு இயக்கத்தின் ஒழுங்கு, கட்டுப்பாடு என்பவற்றைப் பேணுவதில் சீலன் காட்டிய சிரத்தை அசாதாரணமானது. அந்த வகையிலே தலைவர் பிரபாகரனின் பூரண நம்பிக்கைக்கும் அன்பிற்கும் சீலன் பாத்திரமாக இருந்தான்.  ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாத சுயநலமிகளும் கூட இருந்தே இயக்கத்திற்கு குழிபறித்து விட்டு ஓடிய துரோகிகளும் பிளவுவாத நடவடிக்கையில் ஈடுபட்டுத் தூய்மையான இயக்கத்தை உடைக்க முயன்றபோது, இயக்கத்தின் கட்டுக்கோப்பைத் தளரவிடாது காப்பதிற் பிரபாகரனுடன் உறுதியாக நின்றவர்களிற் சிலன் முதன்மையானவன். புதவி இறக்கப்பட்டதற்காக இயக்கத்தைவிட்டு ஓடியவர்களைப் பார்த்து சீலன் சிரித்திருக்கிறான்.

அந்தச் சிரிப்பிற் சினமும் தோய்ந்திருக்கும். இயக்கத்தின் இரத்த நாளமாகவே சீலன் திகழ்ந்தான். தான் நம்பியவர்கள் எவ்லோரும் பதவிப் பித்தர்களாயும் சுயநலமிகளாயும் வேஷங்காட்டித் திரிந்ததைப் பார்த்துப் பிரபாகரன் விரக்திகொண்ட கணங்களில்இ சீலன் இயக்கத்திற்கு புதிய இரத்தம் பாய்ச்சுவதில் துணைநின்று பெரும் பணியாற்றியிருக்கிறான்.சீலன் இராணுவப் படிப்புப் படித்தவன் அல்லன். வெளிநாடுகளிற் போர்ப்பயிற்சி பெற்றவனுமல்லன். போர்மூலமாகவே போரை அறிந்தவன். இயக்கத்தின் இராணுவப்பிரிவுக்கு தலைமை வகித்து இவன் நடத்திய வெற்றிகரமான கொரில்லாத் தாக்குதல்கள், இயக்கத்திற்கு வலிமையைச் சேர்த்து, விடுதலைப் போராட்டத்தையும் முன்னெடுத்துச் சென்றன.

தழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மைவாய்ந்த கொரில்லா வீரன் சீலன். படைத்தலைவன் என்பவன் ஆணை பிறப்பிப்பவன் மட்டுமல்லன் தானே முன்னுதாரணமாகத் திகழ்ந்து போரை வழிநடத்துபவன் என்பதற்குச் சீலனே ஓர் இலக்கணம். ஒரு கொரில்லாத் தாக்குதலை மேற்கொள்ளுமுன் அதற்கான தகவல்களைத் திரட்டுவதிலும் அதன் செயற்பாடு, விளைவு என்பவற்றை ஆராய்வதிலும் அவன் கடுமையாக உழைத்தவன். கவனப்பிசகால் எந்தவிதமான தீங்கும் ஏற்பட்டுவிடாது பார்த்துக்கொள்வதிலும் அவன் மிகவும் விழிப்புடன் இருப்பான். அசாத்தியமான துணிச்சலும் எதிரிகளின் பலவீனங்களை ஆராய்ந்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்கும் நுண்ணிய அறிவுமே, குறிகிய காலத்தில் இராணுவப் பிரிவின் தலைவனாக அவனைப் பதவி வகிக்கும் நிலைக்கு உயர்த்தியது.

‘ஒரு கொரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியிலன்று; அவனது மனத்தில் தான் இருக்கிறது’ என்பது சீலனின் அனுபவ வாசகம்.

      அவனது மனவலிமை அபாரமானது.
சாவுக்கு அவன் வாழ்க்கை ஒரு சவால்.
துப்பாக்கிப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் போது முதன்முறை நெஞ்சிலே குண்டு பாய்ந்தது. இரத்தம் பீறியடிக்க விழுந்து கிடந்த நிலையிலுங்கூட அந்த வீரனின் முகத்தில் புன்சிரிப்பு மிளிர்ந்ததை இயக்கத் தோழர்கள் என்றும் நினைவுகூர்வர். மூச்சுவிடவும் திராணியற்றுப் போன நிலையிலும் அவன் திணறித் திணறிச் சொன்ன வார்த்தைகள்:

      ‘இயக்கத்தைக் காட்டிக்கொடுத்திடாதீங்க’. பிறகும் பேசுவதற்கு மூச்சு இடந்தந்தபோது அவன் சொன்னான்: ‘இயந்திரத் துப்பாக்கியைக் கொண்டுபோய் பாதுகாப்பான இடத்தில் வையுங்கள்’. மரண அவஸ்தையிலும் அந்த மாவீரன், இயக்கம் குறித்து மட்டுமே உதிர்த்த வார்த்தைகள் கண்ணீரோடு மட்டுமல்ல் பெருமிதத்தோடும் நினைவுகூரத்தக்கவை. உண்மைதான்.சாவுக்கு சவால்விட்ட அந்த விடுதலை வீரனை இறுதியிற் சாவு அணைத்தபோது, அவன் இயக்கத்தைக் காட்டிக்கொடுத்திடவும் இல்லை; இயந்திரத் துப்பாக்கியைப் பாதுகாப்பான இடத்தில் வைக்கத் தவறவுமில்லை.

சீலன் திருமலையின் வீரமண்ணிலே விளைந்த நல்முத்து. சிங்கள இனவெறியாட்சியாளர்களின் நேரடியான ஒடுக்குமுறைக்குட் சிக்குண்டுகிடந்த திருகோணமலையின் நடைமுறை அனுபவங்களை அவன் கண்ணூடாகக் கண்டவன். சிறீலங்காவின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் கடற்படை, விமானப்படையின் அடக்குமுறைகளும் சிங்களக் காடையர்கள், இராணுவம், பொலிஸ் ஆகியோரின் அரவணைப்புடன் தமிழ் மக்களைத் துன்புறுத்தும் கொடுமைகளும் திருமலையில் ஏராளம். இந்த ஆக்கிரமிப்பிற்கு இடங்கொடுத்து வந்ததால்தான் திருமலை மண்ணையே சிங்களவர்களுக்குப் பறிகொடுக்கும் நிலை வந்தது என்று சீலன் கொதிப்பான். கல்லூரி நாட்களிலேயே இனவெறி பிடித்த சிங்கள ஆளும் வர்க்கத்திற்கெதிரான போராட்ட உணர்வுகொண்டவனாகச் சீலன் திகழ்ந்தான்;. 1978ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கொண்டுவரப்பட்ட சிறீலங்கா ஜனநாயக சோசலிஸக் குடியரசின் அரசியற் சாசனத்தின் அடிப்படையில், ஜே.ஆர் ஜெயவர்த்தனா ஜனாதிபதியாகப் பதவியேற்கும் வைபவத்தினைத் தமிழீழ மண்ணில் அமர்க்களமாகக் கொண்டாட அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை அம்பலப்படுத்த, பாடசாலை மாணவனான சீலன் முன்வந்தான்.

இந்த வைபவத்தினையொட்டித் திருமலை இந்துக் கல்லூரியில் சிறீலங்காவின் தேசியக்கொடியை ஏற்றி வைக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. சீலன் தனக்கேயுரியதான நுட்பமான அறிவைப் பயன்படுத்திஇ ‘பொஸ்பரஸ்’ என்னும் இரசாயனத்தை அத்தேசியக்கொடி சுருளில் மறைத்து வைத்தான். தேசியக்கொடி ஏற்றப்பட்ட போது அது எரிந்து சாம்பலாகியது. சந்தேகத்தின் பேரில் 18 வயது மாணவனான சீலன் கைதுசெய்யப்பட்டு, சிங்களக் கூலிப்படையாற் சித்திரவதை செய்யப்பட்டான். அந்த வயதிலும் தனக்கு உடந்தையாக இருந்த எவரையும் அவன் காட்டிக்கொடுக்கவில்லை. கொள்கையிலே உறுதிகொண்டவர்களைச் சிறைச்சாலைகளும் சித்திரவதைகளும் என்ன செய்து விட முடியும்?

தனிமனிதரீதியிலான எதிர்ப்புணர்வால் அரச இயந்திரத்தை அழித்துவிடமுடியாது என்ற அனுபவத்தையும் இவை சீலனுக்குப் போதித்தன. இந்த அனுபவமே சீலன் தன்னை ஒரு புரட்சிகர இயக்கத்தில் இணைத்துக்கொள்ள, உந்துசக்தியாக உதவியது. ஆயுதந்தாங்கிய அடக்குமுறையை ஆயுதப் போராட்டத்தின் மூலமே தகர்க்க முடியும் என்ற நம்பிக்கையே சீலனைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலே இணைத்தது. இறுதிவரைஇ ‘ஆயுதப் போராட்டம் மூலம் தமிழீழம்’ என்று ராஜபாட்டையில் சீலன் கம்பீரமாகவே நடந்திருக்கிறான். இயக்கத்திற்கு சேர்வதற்குமுன் விட்டெறிந்துவிட்டு வருவதற்கு வளமான வாழ்க்கையோ – கை நிறையக்காசு கிடைக்கும் தொழிலோ சீலனுக்கு இல்லை. ஆனால், இவனையே நம்பி அன்றாடம் சாப்பாட்டிற்கே கஸ்ரப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு வறிய குடும்பம் இருந்தது. வளமான வாழ்க்கையை அல்ல் வறிய குடும்பமொன்றின் எதிர்பார்ப்புக்களை நிர்த்தாட்சண்யமாக தூக்கி வீசிவிட்டுவரும் பெரும் மனத்திடமும் இலட்சியப்பிடிப்பும் சீலனிடம் இருந்தன.

சாக்குப் படங்குகளால் மறைக்கப்பட்ட சிறிய குச்சு; வீடு வேலையோஇ நிரந்தரமான வருமானமோ இல்லாத தந்தை; வீடுகளிற் சமையல் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் தாய்; இரண்டு அண்ணன்மார்; இரண்டு அக்காமார்; ஒரு தங்கை. சீலன் உணவில்லாமலே வாடிய நாட்கள் ஏராளம். சிந்திக்கும் திறன் கொண்ட சீலன் தனது குடும்பம் மட்டுமல்லஇ எத்தனையோ குடும்பங்கள் ஏழ்மை நிலையில் வாடுவதைக் கண்டு நொந்திருக்கிறான். சீலனின் வாழ்நிலை புரட்சிகரச் சிந்தனைகளின் விளைநிலமானது. மார்க்ஸியச் சிந்தனையில் அவன் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டான். மார்க்ஸிய ஒளியில் தேசிய இனப்பிரச்சினையை அவன் தெளிவாக விளங்கிக் கொண்டிருந்தான்.

உலகெங்கும் நடக்கும் விடுதலைப் போராட்டங்களை ஆர்வத்துடன் அவதானித்து வந்தான். பெண் விடுதலை பற்றிய இவனது அபிப்பராயங்கள் சுயசிந்தனையின் பாற்பட்டதாகவும் வியக்கத்தக்கதாகவும் முற்போக்கானதாவும் இருந்தன. இத்தகைய அரசியற்பிரக்ஞை கொண்ட சீலன், இராணுவப் பிரிவுத் தலைவனாகத் திறனோடு செயற்பட்ட காலம் குறித்துத் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் பெருமிதங் கொள்கிறது. குறுகிய காலத்தில் சீலன் சாதித்தவை மகத்தானவை. 1981 ஒக்ரோபர் மாதம், பிரிகேடியர் வீரதுங்க சிறீலங்கா அரசால் பதவி உயர்வு பெற்றுஇ இராணுவக் கொமாண்டராக நியமிக்கப்பட்ட போது, தமிழீழ வரலாற்றில் முதல் தடவையாக சிறீலங்கா இராணுவக் கூலிப்படைக்கு எதிரான கொரில்லாத் தாக்குதலை வெற்றிகரமாகத் தொடங்கி, இரண்டு வீரர்களைச் சுட்டு வீழ்த்திய பெருமை சீலனுக்குரியது.

1982இல் ஜனாதிபதித் தேர்தற் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணத்திற்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, விஜயம் செய்வதையொட்டி, காரைநகர் பொன்னாலைப் பாலத்திற் கடற்படை வீரர்களின் ட்ரக் வண்டிகளைச் சிதைக்கும் கொரில்லா நடவடிக்கையும் சீலனின் தலைமையிலேயே நடந்தது. துரதிஸ்டவசமாகச் சிறீலங்காக் கடற்படைக் கூலிகள் இத்தாக்குதலிலிருந்து தப்பித்துக் கொண்டனராயினும் இத்தாக்குதல் நடவடிக்கை சிறீலங்கா அரசை நடுக்கமுறச் செய்தது.1982 ஒக்ரோபர் 20ஆம் திகதிஇ பாசிஸ வெறியன் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டான்.

      ஒக்ரோபர் 27.
சாவகச்சேரி.
புலர்ந்தும் புலராத காலை.

யாழ் – கொழும்பு பிரதான வீதியிற் சற்று உள்ளே தள்ளிச் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் அமைந்திருந்தது; சார்ஜ் அறை, ழு.ஐ.ஊ இன் அறை, பொலிசார் தங்குமிடம் ஆகியவற்றை உள்ளடக்கியது. பொலிஸ் நிலையத்திற்குச் சற்றுத் தள்ளி ஒரு மினிபஸ் நிற்கிறது. மினி பஸ்ஸிலிருந்து இராணுவ உடை தரித்த விடுதலைப்புலிகள், சீலனின் தலைமையில் உப இயந்திரத்துப்பாக்கி – எஸ்.எம்.ஜி., தானியங்கித் துப்பாக்கிகள் சகிதம் மின்வெட்டும் வேகத்தில் பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்டனர். எதிர்த்தாக்குதல் நடத்த முனைந்த இரண்டு பொலிஸ்காரர்கள் சுடப்பட்டனர்.
அந்த அதிகாலையின் அமைதியைக் கிழித்துக் கொண்டு, துப்பாக்கி வேட்டுகள் தொடர்ச்சியாகத் தீர்க்கப்படுகின்றன. சார்ஜ் ரூம் சிதைக்கப்படுகின்றது.

பயம் அறியாத சீலன் முன்னின்று மேற்கொண்ட தாக்குதலிற் பொலிஸ் அதிரடிப்படையின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கானான். வலது காலின் முழங்கால் மூட்டிற்குச் சற்று மேலே ஐந்து துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்தன. பொலிஸ் நிலைய வளவுக்குக் கொண்டு வரப்பட்ட மினி பஸ்ஸிற்குள் ஆயுதங்கள் அனைத்தும் துரிதமாக ஏற்றப்படுகின்றன. காலைக் கெந்திக் கெந்தி இழுத்துக்கொண்டு, தனது எஸ்.எம்.ஜி உடன் எதிரியின் துப்பாக்கியையும் இழுத்துக்கொண்டு மினி பஸ்ஸிற்கருகில் வந்து, சகபோராளிகளின் கைகளிற் கொடுத்துவிட்டுத் தள்ளாடுகிறான் சீலன்; மயக்கமடைகிறான்.

இதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்புதான் துப்பாக்கிப் பயிற்சியின் போது நெஞ்சிலே குண்டு பாய்ந்து, ஆஸ்பத்திரியிற் சிகிச்சைபெற்று ஓரளவு உடல் தேறியிருந்த சீலனுக்கு இது இரண்டாவது காயம்.

இந்தத் துப்பாக்கிக் காயம் சீலனை மிகவும் பலவீனப்படுத்தியது. காயப்பட்டு விட்டாற் சீலனை வைத்துப் பராமரிப்பது சிறிது கடந்தான். ‘நோவுது, நோவுது’ என்று தொடர்ச்சியாய் முனகிக் கொண்டிருப்பான். முதலாவது காயத்தின் போது நோவைத் தணிப்பதற்காகப் ‘பெதற்றின்’ மருந்து கொடுக்கப்பட்டு, சீலன் அதற்குக் கொஞ்சம் பழகிப் போனான். ‘எனக்குத் தாங்க முடியாது; பெதற்றின் தாங்கோ’ என்று கெஞ்சும் போது, இந்த விடுதலைப்புலி ஒரு குழந்தையாகும். ஓரிடத்திற் கிடக்கமாட்டான்; புரண்டு புரண்டுகொண்டேயிருப்பான். ஒருமுறை, காயத்தின் நோவிலிருந்து மீள மன ஆறுதலுக்குக் கடவுளை நினைத்துக் கொள் என்று, சீலனிடம் வைத்தியசாலையில் அவனைக் கவனித்துக்கொண்ட நண்பன் சொன்ன போது, அவன் தீர்க்கமாக மறுத்துவிட்டான். ஆனால், பின்பொருமுறை, தனது நெருக்கமான அரசியல் நண்பன் ஒருவன் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் அகப்பட்டுக் கொண்டபோது, சீலன் மனமுருகிப் போனான். பிறப்பால் மட்டுமே கத்தோலிக்கனான சாள்ஸ் என்னும் சீலன்இ நண்பனின் மீட்சிக்காக அர்ச்சனைத்தட்டோடு இந்துக் கோவிலின் படிகளில் ஏறியிருக்கிறான். ஆறிவினை உணர்வு பின்தள்ளியிருக்கிறது. புத்தகங்களில் கிரகித்த சிந்தனைகளையும் மேவி அவனது நட்பின் உணர்ச்சிச் சுழிப்பு பிரவகித்தோடியிருந்தது.

அவன் ஓரளவு குணமாகியிருந்தாலும் கெந்திக் கெந்தித்தான் நடப்பான். ஐந்துமாத இடைவெளியில், நெஞ்சிலும் காலிலுமாக அவன் வாங்கிய துப்பாக்கிக் குண்டுகளின் காயங்களில் இருந்து நலம்பெற்றுஇ அவன் தன்னம்பிக்கையோடு தான் செயற்பட்டான்.

நெஞ்சிலே காயம்பட்டுச் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிந்து ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறும் போது, ஆஸ்பத்திரியில் நின்ற நாட்களில் அன்பாய் அவனைப் பார்த்துக் கொண்ட நேர்ஸ் அவனிடம் கேட்டாள். ‘நீங்கள் குணமானது உங்களின் தன்னம்பிக்கையினாலா? நண்பர்களினாலா? டொக்ரரினாலா? அல்லது கடவுளின் கிருபையினாலா?’ அந்த நேர்ஸ் என்ன பதிலை எதிர்பார்க்கிறாள் என்பது, சீலனுக்கு நன்றாகத் தெரியும். விடை பெறுகிற நேரத்தில், அவள் எதிர்பார்க்கும் அந்தப்பதிலைச் சொல்லி வைக்கலாமே என்று, பக்கத்தில் இருந்த நண்பர்கள் மனத்தில் நினைத்துக் கொள்கின்றனர். அவளுடைய திருப்திக்காகத் தான் ஏற்றுக்கொள்ளாத ஒரு பதிலைச் சொல்ல அவன் தயாராக இல்லை.

சிகிச்சை பெற்று ஐந்து மாதங்கூடத் தரிக்காமல் அவன் மீண்டும் தமிழீழத்தின் போராட்டக் களத்தில் இறங்கினான். 1983 மே மாதம் 18ஆம் திகதி. சிறீலங்கா அரசு நடத்தும் உள்ளுராட்சித் தேர்தலுக்கான திகதி. ஓட்டுப் பொறுக்கும் அரசியலில் ஊறிப்போன கட்சிகள் தேர்தலிலே திளைத்தன. யாழ்-மாவட்டத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்க் கொங்கிரஸ், நவசமசமாஜக் கட்சி ஆகியனவும் தீவிரத் தேர்தற் பிரச்சாரத்தில் இறங்கியிருந்தன.

யாழ், உள்ளூராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பணியில் இயக்கம் தீவிரமாகச் செயற்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சந்தர்ப்பவாதச் சமரசத் தலைமைகளால், தமிழ் மக்களுக்கு விடிவேற்படாது என்பதை நன்குணர்ந்திருந்த சீலன், அவர்களை மக்களுக்கு இனங்காட்டுவதில் முன்னின்றான். இனவாத அரசின் தேர்தல் மாயையிலிருந்து தமிழீழ மக்கள் விடுபட வேண்டுமென்று, இயக்கம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தபோது, தேர்தற் பகிஸ்கரிப்புப் பிரச்சார வேலைகளுக்காக இரவு, பகலாக அரசியல்ரீதியாகவும் இராணுவரீதியாகவும் சீலன் உற்சாகத்துடன் பணியாற்றினான்.
பாசிஸ இனவெறியன் Nஐ.ஆர். இன் சார்பில், ஐக்கிய தேசியக்கட்சிக் கட்சியின் சார்பில் இயங்கிய மூவர் மீது, ஏப்ரில் 29ஆம் திகதி இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் சீலனின் தலைமையிலேயே மேற்கொள்ளப்பட்டது. மே 18ஆம் திகதி, தேர்தல் நிலையங்களின பாதுகாப்புக் கருதிச் சிறீலங்கா அரசு யாழ்க்குடாநாடு முழுவதும் ஆயுதப்படைகளை குவித்தது. ஒவ்வொரு தேர்தல் வாக்களிப்பு நிலையத்திற்கும் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் ஆயுதந்தாங்கிய பொலிஸார் ஐவரும் ஆயுதந்தாங்கிய இராணுவத்தினர் ஐவரும் பாதுகாப்பிற்காக உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இதனைவிட மணித்தியாலத்திற்கு ஒருமுறை பொலிசாரும் இராணுவத்தினரும் ரோந்து பார்த்த வண்ணமாக இருந்தனர்.

மே 18ஆம் திகதி மாலை 4.15 மணி.

கந்தர்மடம் சைவப்பிரகாச மகாவித்தியாலயத்தின் வாக்களிப்பு நிலையத்திற்கருகில், மூன்று சைக்கிள்களில் இளைஞர்கள் வந்திறங்குகிறார்கள். காலைக் கெந்தியவாறு ஒரு சைக்கிளின் பாரிலிருந்து இயந்திரத் துப்பாக்கியுடன் இறங்கும் சீலனின் தலைமையிற் கட்டளைகள் பிறக்கின்றன. பாதைகள் மறிக்கப்பட்டு, வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. வீதியைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குட் கொண்டு வந்தபின்இ இராணுவக் கூலிகளுடன் சீலன் நேருக்குநேர் நின்று நடத்திய தாக்குதல், சாவைத் துச்சமாக மதித்த ஒருவனின் துணிச்சலுக்குச் சாட்சி. இந்தத் தாக்குதற் சம்பவம்பற்றிச் சிங்கள நூலாசிரியர் ஒருவர் விபரிக்கையில்இ ‘விடுதலைப் புலிகளோடு பாதுகாப்புப் படையினர் நின்று தாக்குப்பிடிக்கக்கூடியவர்கள் அல்லர் என்று மக்கள் கருதியதுடன் விடுதலைப் புலிகளின் இராணுவத் திறமையையும் மெச்சினர்’ என்றே குறிப்பிடுகிறார். கந்தர்மடச் சம்பவம் நடைபெற்று அப்போது ஒன்றரை மாதமாகி விட்டது.

ஜுலை 5ஆம் திகதி. நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது.
கொக்குவில், தாவடியில் ஒரு வீட்டுக்குள், சீலன் இரானுவ உடையில் இயந்திரத் துப்பாக்கியுடன் நுழைகிறான். ஆந்த வீட்டுக்காரரைத் தட்டி எழுப்பி, தாங்கள் குருநகர் இராணுவ முகாமிலிருந்து வந்திருப்பதாகவும் தாவடிச் சந்தியில் தங்கள் ஜுப் பழுதாகி நிற்பதாகவும் வீட்டுக்காரரின் டெலிக்கா வானைத் தந்துதவுமாறும் கேட்கிறான். அந்த வீட்டுக்காரரும் பவ்வியமாகத் தனது வேனைக் கொடுக்கிறார்.

நள்ளிரவைத் தாண்டி 2.30 மணியளவில், சீலனும் அவனது நண்பர் சிலரும் காங்கேசன்துறைச் சீமேந்துத் தொழிற்சாலையருகில் இந்த வேனை நிறுத்திவிட்டு, ஆயுதங்களோடு தொழிற்சாலைக்குள் நுழைகின்றனர். துப்பாக்கி முனையில், வாசலில் நின்ற காவலாளிகளையும் நேரப்பதிவாளர்களையும் கட்டிவைத்துவிட்டு, களஞ்சியப் பொறுப்பாளரின் சாவிகளை எடுத்துக் கொள்கின்றனர். ஐந்தே நிமிடங்களில் நான்கு பெரிய தகர்ப்புக் கருவிகயையும் பிற தேவையான உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு தொழிற்சாலையை விட்டு வெளியேறுகின்றனர்.

அதிகாலை 4.30 மணியளவில், தாங்கள் பெற்றுக்கொண்ட டெலிக்கா வேனை மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்கின்றனர். மிகத்திறமையாகச் சீலன் இயக்கத்துக்குத் தேடித்தந்த தகர்ப்புக் கருவிகள், பிற்பட்டகாலத் தாக்குதல் நடவடிக்கைகளின் வெற்றிக்குப் பெருந்துணை புரிந்துள்ளன. ஆனால், இவற்றைத் தேடித் தந்தபின் பத்து நாட்களே சீலன் வாழ்ந்தான்.

1979ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் இயக்கத்திற் சேர்ந்த சீலன், 1981ஆம் ஆண்டிலிருந்து அரச படைகளால் தேடப்பட்டு வந்தான். இதன்பின், தலைமறைவுக் கொரில்லா வாழ்க்கையை மேற்கொண்ட சீலனின் புகைப்படங்கள் எதுவுமே அரச படைகளின் கைகளிற் சிக்காமையினால், இவன் மக்கள் மத்தியில் வௌ;வேறு பெயர்களில் அரசியற் பணிகளை மேற்கொள்வது சாத்தியமாக இருந்தது.
அரச படையினால் தேடப்பட ஆரம்பித்ததும் தனது வீட்டுக்குப் போவதைப் பூரணமாக நிறுத்திக் கொண்டான். ஆஸ்பத்திரியில் நெஞ்சில் துப்பாக்கிக் காயத்திற்காகச் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் சமயத்திலேதான்இ அவனது தந்தை இறந்த செய்தி, சில நாட்கள் கழித்து அவனுக்குத் தெரிய வந்தது. தந்தையும் இல்லாத நிலையில், தன் தாய் பொறுப்பு மிகுந்த அந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற எவ்வளவு கஷ;ரமுற்றிருப்பாள் என்று சீலன் நினைக்காமல் இருந்திருப்பான் எனச் சொல்ல முடியாது. தனது குடும்பப் பிரச்சினைகள் குறித்து நெருங்கிய நண்பர்களிடம் மிக அபூர்வமாகவே கதைத்திருக்கிறான்.

சீலன், லூக்காஸிற்கும் ஜெபமாலைக்கும் மட்டுமே தான் சொந்தமானவன் அல்லன் என்று உணர்ந்திருந்தான். சீலன் இவன்தானா என்று அடையாளங்காணத் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாண ஆஸ்பத்திரியின் சவச்சாலைக்குக் கொண்டு வரப்பட்ட சீலனின் தாய், ஆடாமல் அசையாமல் நிற்கிறாள். நெற்றிப் பொட்டிலே பாய்ந்த துப்பாக்கிச் சன்னத்தால் தலை சிதைந்த நிலையிலே, தான் பெற்ற அழகுச் செல்வன் கிடத்தப்பட்டிருப்பதை அவள் கண்ணீர் திரையிட உற்று நோக்குகின்றாள். நான்கு வருடங்களுக்கு முன் மெல்லியவனாக வீட்டை விட்டு வெளியேறிய மகன், வாட்டசாட்டமாக – வளர்ச்சி கொண்டவனாக – அடையாளமே கண்டுபிடிக்க முடியாத அளவு மாறிப்போய்க் கிடத்தப்பட்டிருக்கிறான். அந்த மச்சம், உதடுகள், சிதைவுக்கூடாகவும் முழுமை காட்ட முயலும் முகம் பெற்றவள் இனங்காண்கிறாள்.

அது அவளுடைய செல்வம்தான். அரைமணி நேரமாக அவள் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். துயரந்தோய்ந்த அந்தத் தாயின் பக்கத்திலே சீலனின் அண்ணன் அந்த உடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அமைதியை இராணுவப் படையில் ஒருவன் குலைக்கிறான்.

‘இது ஒண்ட மகனா?’ கொச்சைத் தமிழில் கேட்கிறான். கண்ணீர் வழியத் தாய் தலையசைக்கிறாள்.
தன் மகனின் உடலைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு அந்தத் தாய் அங்கு நின்ற மேஜரிடம் வேண்டுகிறாள். அவனோ வெறுப்பை உமிழ்கிறான். அந்தச் ‘செல்வ மகனின்’ உடல் அந்தத் தாய்க்குச் சொந்தம். அது தர்மம். அந்த ‘விடுதலை வீரனின்’ உடல் அரசுக்குச் சொந்தம். இது சட்டம். தான் பெற்ற மகனைக் கௌரவுமாக அடக்கஞ்செய்ய நினைத்த அந்த ஏழைத் தாயின் உரிமையைத் ‘தார்மீக’ அரசின் பயங்கரவாதம் நெரித்தது.

சீலன் உயிரோடிருந்ததை விட அவன் மரணித்த போதுதான் அரசுக்குப் பெரும் சவாலானான். புரட்சிவாதிகளின் வாழ்க்கை சாவுக்குப் பிறகு தான் ஆரம்பமாகிறது. அவனது சடலம் கிடத்தப்பட்டிருந்த வைத்தியசாலை பலமான இராணுவக் காவலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
அதற்குப்பின் அந்தத் தாய்க்கு அந்த வீரமகனின் சடலத்தைப் பார்க்க முடியவில்லை. இலட்சோப இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களிலே அணையாத புரட்சித் தீயாக ஒளி வீசிக்கொண்டிருக்கும் சீலனின் சடலம், யாருக்கும் தெரியாமல் அவசரகாலச் சட்டத்தின் கீழ் இராணுவ மிருகங்கள் சூழ்ந்து நிற்க எரிக்கப்பட்டது.
……………………
விடுதலைக்காகவே வாழ்ந்த அந்த வீரமகனை பிரபாகரன் கண்ணீருடன் நினைவு கூறுகிறார்;
‘எவ்வளவு அற்புதமானவன் என் சீலன்!’
‘ஆசையாகவல்லவா நான் அவனுக்கு இதயச்சந்திரன் என்று பெயர் வைத்தேன்!’
‘இவ்வளவு சீக்கிரமா என்னைவிட்டுப் போனான்?’
‘அவனது மரணச் செய்தி பொய்யாகப் போய்விடாதா என்று என் மனம் நடுங்கியதே….’
‘எவ்வளவு கஸ்ரங்களில் உயிருக்குயிராய்த் துணை நின்றான்….’
‘காடுகளில் அவனோடு திரிந்த காலங்கள்தான் எத்தனை மகத்தானவை….’
‘இலட்சியங்களோடு காத்திருந்தானே….’
‘ஏன் திடீரென இப்படி இல்லாமற் போனான்?’

‘மீண்டும்….. மீண்டும்….. நினைவிற் சுழல்கிறது – அந்த அழகு முகம். அந்த மழலைச் சிரிப்பு. அந்தப் பாட்டு. அன்று – இரவு சூழ்ந்துவிட்டது. சலசலக்கும் காட்டு மரங்கள். சருகுகளின் ஓசை, சில்வண்டுகளின் ரீங்காரம், காற்றின் வருடலில், கனலும் தீக்கங்குகள். குழுமியிருக்கும் விடுதலை இளவல்கள். அவர்களிடையே பல்சுவை நிகழ்ச்சி. அது சீலனின் முறை. அவனுக்குப் பாட்டு.
அதோ சீலன்! எப்போதும் போல் கட்டமிட்ட சட்டை, கணுக்காலுக்கு மேல் மடித்துவிட்ட ஜூன்ஸ். அவனிடம் கூச்சம். சிரித்துச் சமாளிக்கிறான். நண்பர்களின் தூண்டுதல். பாட்டின் ஆரம்பம் ஆரவாரமான வரவேற்பு. உற்சாகமடைகிறான்.

‘கைகளை அகலவிரித்துக் கம்பீரமாகப் பாடுகிறான்.’
‘அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும். இதோ இந்த அலைகள் போல……..’

‘வீரசீலம்’ எனும் குறும்படமானது இவரது நினைவாகவே எடுக்கப்பட்டது என்பதனையும் நாம் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.
நினைவுப்பகிர்வு – விடுதலைப்புலிகள்
படிப்பகம் இதழ்

சார்ல்ஸ் அன்ரனி சிறப்பு படையணி

Atho Antha Paravaipola…நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments