×

“பாண்டியன் சுவையூற்று” – கிளிநொச்சி திறந்து வைக்கப்பட்ட நாள் 01.10.2003.

“பாண்டியன் சுவையூற்று” – கிளிநொச்சி திறந்து வைக்கப்பட்ட நாள் 01.10.2003.

முன்னதாக 28.09.2003 அன்று ஒழுங்குபடுத்தலின் படி தேசியத்தலைவர் அவர்கள் தனது குடும்பத்தினருடன்
திடீர் விஜயம் மேற்கொண்டார். அதன் பொருட்டு அவ்விடமே புனிதமடைந்தது. நமது தேசத்தின் பாலகன் பாலச்சந்திரனும்வ ந்திருந்தார்.

சுவையூற்று வளாகம் முழுவதையும் சுற்றிப்பார்த்தார். குட்டி மாமாவின் கடை நன்றாக இருப்பதாக தந்தையாரிடம் தெரிவித்தார். (பின்னாளிலும் இடையிடையே பாலா வந்து சுவையூற்று வட்டக்கொட்டிலில் இருந்ததைப் பார்த்திருக்கிறேன்.)
தலைவர் உணவுவகைகளை ஒவ்வொன்றாக சுவை பார்த்தார்.

அதன் பின்னாளில் 01.10.2003 அன்று திறந்து வைக்கப்பட்டது. சுவையூற்றின் சுவை நினைக்கவே நாவூறும்.

முற்றுமுழுதான கணணி மயப்படுத்தப்பட்ட வன்னியின் முதல் நிறுவனம் இதுதான் என எண்ணுகிறேன்.
01.10.2003 தொடக்கம் 2008 இன் இறுதிவரை இது கிளிநொச்சி மக்களின் பசி போக்கி சுவை தாகம் தீர்த்தது என்றால் மிகையாகாது.

அண்ணனின் எண்ணப்படி தமிழேந்தி அண்ணனின் ஒத்துழைப்புடன் குட்டி அண்ணனின் முயற்சியில்
குறைந்த செலவில் நிறைந்த பயனை மக்கள் பெறவேண்டுமென உருவானதே சுவையூற்று. அதில் குட்டியண்ணன் உறுதியாக இருந்தார். (குட்டியண்ணன் ஈழத்தின் எம் ஜி ஆர்)

அந்த காலத்தில் மக்களின் பொழுது போக்கு மையமாகவும் சந்திப்பிடமாகவும் கூட சுவையூற்று இருந்தது.

மறைந்த அரசியல்வாதி சந்திரசேகரன், நடிகர் மணிவண்ணன் முதலானோரையும்
சுவையூற்று கண்டது.

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments