
சதாசிவம் சிறீதர் (எழில்வளவன்)
சென்னை ஓட்டேரி கே.எம். தோட்டம் 9 ஆவது தெருவில் வாழ்ந்து வந்த சதாசிவம் சிறீதர் (எழில்வளவன்) (வயது 33), 99 ஆவது வட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்தவர்.
இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்துச் சென்னையில் புதன்கிழமை, மார்ச் 4, 2009, தீக்குளித்த அவர் மருத்துவ சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை, மார்ச் 5, 2009 அன்று உயிரிழந்தார். இவரது மனைவியின் பெயர் இலட்சுமி. இவருக்கு ஈழச்செல்வன், தமிழ்ச்செல்வன் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.