×

கீழடியில் 13 எழுத்து தமிழி பானை ஓடு கண்டுபிடிப்பு

திருப்புவனம்–சிவகங்கை மாவட்டம் கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் 13 எழுத்துக்கள் (தமிழி) அடங்கிய பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கீழடி, அகரம், கொந்தகையில் ஏழாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடியில் எட்டு குழிகள் தோண்டி நடக்கும் அகழாய்வில் தங்க காதணிகள், பாசிகள், கல்உழவு கருவி, இரும்பு ஆயுதம், உறைகிணறு உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன. 13 எழுத்துக்கள் (தமிழி) அடங்கிய பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. பானையில் முட்கள் கொண்டு எழுதியிருக்கலாம். எழுத்துகளை ஆய்வு செய்ய தொல்லியல் துறை முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ஆதன், உதிரன் என்ற பெயர் கொண்ட ஓடுகள் கிடைத்தன. அதிகபட்சமாக வரிவடிவ எழுத்துகள் 7 அடங்கிய பானை ஓடு கிடைத்த நிலையில் 13 எழுத்துக்கள் கொண்ட இந்த ஓட்டால் கல்வியறிவு மிக்க மக்கள் இங்கு வாழ்ந்ததற்கு சான்றாக கருதப்படுகிறது.

சிவப்பு பானைகீழடியில் ஆக.,11ல் ஒரு குழியில் அடர் சிவப்பு நிற பானை தென்பட்டது. முழு அகழாய்வு நடந்த நிலையில் மூன்றரை மீட்டர் ஆழத்தில் 60 செ.மீ., உயரம் கொண்ட இந்த பானையின் வெளிப்புற விட்டம் 34 செ.மீ., உட்புற விட்டம் 30 செ.மீ., வாய்புற விட்டம் 24 செ.மீ., தடிமன் இரண்டு செ.மீட்டராகவும் உள்ளது. இந்த பானை கிடைத்த குழியில் மேலும் ஐந்து பானைகள் கிடைத்துள்ளன. இவை வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கிறது. பானையில் உள்ள பொருட்கள் என்னவென்று தெரியவில்லை. முழுமையாக வெளியே எடுக்க தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments