
அனுராதபுரத்தின் மறக்கப்பட்ட காளி அம்மன் கோயில் — 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சாட்சி!
அனுராதபுரம் புனித நகரின் மையத்தில், தூபராம தாதுகோபத்திலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் — ஒரு காலத்தில் பொலிவோடு விளங்கிய காளி அம்மன் கோயில் இன்று பற்றைகளுக்கிடையே மறைந்து கிடக்கிறது.
சிலையின் சிறப்பு:
இலங்கையில் கிடைத்த தெய்வச் சிலைகளிலேயே மிகவும் அழகிய வடிவமைப்பைக் கொண்ட மகிஷமர்த்தினி அம்மன் சிலை இங்கே கண்டெடுக்கப்பட்டது!
எட்டு கரங்களில் சங்கு, கதா, வாள், வில், திரிசூலம் ஏந்தி — கிரீடம், மணிமாலை, ஒட்டியாணம், சிலம்பு என முழு அலங்காரத்துடன் காட்சியளிக்கும் இந்த அற்புத சிலை இன்று கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தை அலங்கரிக்கிறது.
வரலாற்று முக்கியத்துவம்:
✅ பொலநறுவைக் காலத்தில் நானாதேசிக தமிழ் வணிகர்களால் நிர்மாணிக்கப்பட்டது
✅ 19ஆம் நூற்றாண்டில் தொல்லியல் ஆய்வாளர் H.C.B. பெல் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது
✅ கர்ப்பக்கிருகம், அந்தராளம், மண்டபம் என 20 தூண்களைக் கொண்ட கோயில்
✅ பராக்கிரமபாகு மன்னனின் மனைவி லீலாவதியின் கல்வெட்டு ஆதாரங்களும் இங்கே கிடைத்தன
வலிக்கும் உண்மை:
அனுராதபுரத்தில் உள்ள அனைத்து பௌத்த வழிபாட்டிடங்களும் புனரமைக்கப்பட்டு ஒளிர்கின்றன. ஆனால் இந்த ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த காளி அம்மன் கோயில் மட்டும் கவனிப்பாரின்றி அழிவின் விளிம்பில் நிற்கிறது.
இந்த வரலாற்று சின்னம் பாதுகாக்கப்பட வேண்டாமா?
என்.கே.எஸ். திருச்செல்வம், வரலாற்று ஆய்வாளர், இலங்கை