×

புலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.

புலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.

விடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்கள் வன்னி வான்பரப்பில் முதல் முதல் பறப்பில் ஈடுபடும் போது எமது தேசிய தலைவர் அவர்களால் பார்வையிடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.

பின்னர் அவை தாக்குதலுக்காக புலிகளால் மாற்றி வடிவமைக்கப்பட்டது. கமபிளக் எனப்படும் வரி நிறம் பூசப்பட்டு தாக்குதலுக்கு தயாரானது.

தென்னிலங்கையில் சுமார் 7 முறை பறப்பில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக வன்னி திரும்பிய இவ் விமானங்கள், உலகின் முதல் முதல் விடுதலைப் போராட்ட இயக்கம் ஒன்றின் வான்படை என்ற புகழைப் பெற்றது.

பறப்பில் ஈடுபட்டிருக்கும் விமானங்களை தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டுஅம்மான், பிரிகேடியர் தமிழ்ச்செல்வன், கேணல் ஜெயம், கேணல் விதுஷா, காஸ்ரோ, கேணல் தீபன் ஆகியோர் பார்வையிடுவதையும், பொட்டுஅம்மான், தமிழ்ச்செல்வன் இருவரும் விமானத்தில் மகிழ்ச்சியோடு பயணிப்பதையும் காணலாம்.

 

 

வான்புலிகள்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments