×

மட்டு. தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்

மட்டு. தாண்டியடிப்பகுதியில் மாவீரர் துயிலுமில்லம் முற்றாக அழிக்கபட்டு அங்கு பொலிஸ் நிலையத்திற்கான கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றது மட்டு. படுவான்கரைப் பகுதியில் படையினர் மேற்கொண்ட பாரிய நடவடிக்கையில் அப்பிரதேசம் படையினரால் கைப்பற்றபட்டடன.இதையடுத்து வாகரை மற்றும் தாண்டியடி பகுதிகளிலிருந்த மாவீரர் துயிலுமில்லங்கள் இருந்த இடம் தெரியாது படையனரால் முற்றாக அழிக்கபட்டது.

தாண்டியடி மாவீரர் துயிலுமில்லத்தை விடுதலைப் புலிகள் மிகச் சிறப்பாக அமைத்து அதன் சுற்றுப்புறங்களில் நினைவுத் தூபிகளும் எழுப்பப்பட்டிருந்தன.இந்தப் பகுதியைக் கைப்பற்றிய படையினர் நினைவுத் தூபிகளை இடித்துத் தரைமட்டமாக்கியதுடன் மாவீரர் சமாதிகள் அனைத்தும் புல்டோசர்களால் கிளறியெறியப்பட்டு தற்போது அந்த இடத்தில் பொலிஸ் நிலையத்திற்கான கட்டிடம் அமைக்கபட்டடு வருகின்றது.

தற்போது துயிலுமில்லத்தில் ஒரு பகுதியில் விஷேட அதிரடிப்படையினரின் பாரிய முகாம் ஒன்று அமைக்கபட்டுள்ளது.
தங்களுக்காக போராடி உயிர் நீத்த போரிளிகளின் துயிலுமில்லத்தை முற்றாக அழித்து அங்கு படையினர் நிலை கொண்டுள்ளது மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments