
மேதகு வீட்டு பொக்கிஷம்
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், தமிழர் தம் வாழ்வியலை புறத்திணை, அகத்திணை என பிரித்து பாணர்கள் பாடியதை கேட்டு வளர்ந்திருப்போம். ஆயிரம் ஆண்டிற்கு முன் சோழர், பாண்டியர் சமர் புரிந்ததை பாடநூல்கள் வாயிலாய் அறிந்திருப்போம். இவற்றிற்கு சற்றும் குறையாத, வீரர்களாய் வாய்ந்த புலிகளின் வரலாற்றினை நம் சமகாலத்தில் பார்த்த தலைமுறையாய், நாம் சாட்சியாய் உள்ளோம். நாம் தான் இன்றைய பாணர்கள், நாம் கண்ட அந்த வீரத்தினை, துரோகத்தினை, இயலாமையை அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம்.
1985 ஆண்டு நடந்த தாக்குதலின் போது சிதைக்கப்பட்ட, மேதகு அவர்கள் வீட்டில் கண்டறிந்த சில எளிய பொருட்கள் தஞ்சை மாவட்டம் விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உள்ளது.