×

சென்னை விருகம்பாக்கத்தில் ஒய்யாலி

சென்னை விருகம்பாக்கத்தில் ஒய்யாலி – முனியம்மாள் இணையரின் மூன்றாவது மகனாக 27.12.1931 – இல் பிறந்தார். ஆயிரம் விளக்குத் தொலைப்பேசிக் கிடங்கில் பணியாற்றி வந்தார். சிந்தனைத் தெளிவும், உடல் வலிமையும் கொண்டவர். சிலம்பாட்டம் முதலிய வீரவிளையாட்டுகளில் தேர்ந்தவர். மல்லிகா என்ற மனைவியும் அமுதவாணன், அன்பழகன், இரவிச்சந்திரன் என்ற குழந்தைகளும் உண்டு.
இந்தியைத் திணிக்கும் நடுவணரசின் நடவடிக்கை இவரைக் கொந்தளிக்க வைத்தது . விருகம்பாக்கம் நேசனல் திரையரங்கம் அருகே உள்ள மாமரத்தினடியில் 27-1-1965 அன்று இரவு 2 மணிக்கு தன்னை எரித்துக்கொண்டாவது தமிழை வாழவைக்க விரும்பிய தழல் ஈகியர் பட்டியலில் தன்னையும் இணைத்துக்கொண்டார்.
 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments